ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
இதழ் 9கவிதை

ச.துரை கவிதைகள்

by olaichuvadi February 24, 2021
February 24, 2021

 

நத்தை

எனக்குள் எப்போதுமே
வாழ்விற்கும் சாவிற்குகும் இடையே
நகர்கிற சிறு நத்தை இருக்கிறது
அதன் உணர்கொம்புகள்
எனது மகத்தான நாட்களை
கட்டி இழுக்கிறது
என் பிசுபிசுத்த கன்னங்கள்
நீர் காயாத வாடைகாற்றின் சாளாரங்களாகின்றன
கொடும் வெயிலுக்குள் இறங்கும்
பாதங்களை காண்கிறேன்
யாராலும் கண்டெடுக்க முடியாத
நிறமுள்ள வாழ்வே
எதற்கு மத்தியில்
என்னை வைக்கபோகிறாய்
நாளொன்றுக்கு கூட ஓயாது
உலாவும் நத்தையே
சற்றே நீ ஓய்வெடுக்கலாம் இல்லையா.

 

கசிதல்

நானொரு அழுகல்கனி
இதை எங்களூர் சலவைகாரர்தான்
முதலில் சொன்னார்
சென்ற போகத்தில் அவர்
எடுத்து சென்ற உடையில்
அத்தனை அடர்த்தியான சாறுகளாம்
தேய்க்கும் போது கூடுதலாக
மூன்று கைகளை கொடுத்து
இறைவன்தான் உதவினாராம்
அதை கேட்டதும்
எனது அழுகல் உடலை சுற்றிப்பார்தேன்
அதில் எனக்கு அருவருப்பு இல்லை
ஆனால் கேள்வி இருந்தது
நான் எங்கிருந்து அழுகத்தொடங்கினேன்
எனது பாதங்களை புரட்டினேன்
முதுகை திருப்பினேன்
அறைகளை நோட்டமிட்டேன்
குளிர்வடர்ந்த சப்தங்களால் கத்தினேன்
நான் எங்கிருந்து அழுகத் தொடங்கினேன்
வதையானேன்
மார்பில் கத்தியை இறக்கினேன்
ஏகாந்தத்தை புகைத்தேன்
நெஞ்சு கமழியது
புத்திமந்தமடைந்தது
கனிகளை வீசினேன்
நான் எங்கிருந்து அழுகத் தொடங்கினேன்
எல்லாம் வல்ல பூஜ்ஜியமே
முதலில் நான் எங்கிருந்து கசிந்திருப்பேன்
எமது பேரழகு செவியே
முதல் முதலாக நீ எந்த சொல்லுக்கு திறந்தாய்
அந்த சொல்லுக்குதான் நான் கசியத்தொடங்கினேனா
அந்த சொல்லென்ன
அது அத்தனை அடர்த்தியானதா
அப்படியென்றால்
பால்யத்திலே காதுகள் முந்திக்கொண்டு முதிர்ச்சி பெருகின்றன என்பது உண்மைதானா.

 

கர்தோன்

இன்று முழுக்க ஏனோ கர்தோன் நினைவு
அவன் எனக்கு கொடுத்த சங்குமுள்ளை
எங்கு வைத்தேன் என நினைவில்லை
கர்தோன் ஒரு நாய்
கடைசியாக அவனை பார்த்தபோது
நான் சரியாகமாட்டேன் என
கண்களாலேயே சொன்னான்
இங்கு யாரும் சரியானவர்கள் இல்லை
கர்தோன் என நானும் சொன்னேன்
பிறகு தன் தலையை குப்புற கவிழ்த்தி
தொண்டையிலிருந்து
இரத்தம் வடிய வடிய சங்குமுள்ளொன்றை
துப்பி எனக்கு பரிசாக கொடுத்தான்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
கவிதைகள்ச.துரை
0 comment
0
FacebookTwitterPinterestEmail
olaichuvadi

முந்தைய படைப்பு
தாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்!
அடுத்த படைப்பு
இன்னொருவன்

பிற படைப்புகள்

புத்தகத்தின் வெற்றி என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக உண்டாவதில்லை! –...

February 24, 2021

சமகால சிறுகதைகளின் பரிணாமம் சுநீல் கிருஷ்ணன்

February 24, 2021

வலம் இடம் ஜெயமோகன்

February 24, 2021

இருளின் வடிவம் யுவன் சந்திரசேகர்

February 24, 2021

கைத்துப்பாக்கியும் காக்கையும் நக்கீரன்

February 24, 2021

தேவதேவன் கவிதைகள்

February 24, 2021

இந்திரஜாலம் துாயன்

February 24, 2021

லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்

February 24, 2021

வெட்டுக்கிளிகளின் மென் தாக்குதல் டோரிஸ் லெஸ்ஸிங், தமிழில்: கோ.கமலக்கண்ணன்

February 24, 2021

கிழிபடு முகங்கள் பெரு.விஷ்ணுகுமார்

February 24, 2021

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

தேட

தற்போதைய பதிப்பு

  • புத்தகத்தின் வெற்றி என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக உண்டாவதில்லை! – எழுத்தாளர் மிலன் குந்தேரா நேர்காணல்
    ஜோர்டன் எல்கிராப்லி, தமிழில்: ராம் முரளி
  • சமகால சிறுகதைகளின் பரிணாமம்
  • வலம் இடம்
  • இருளின் வடிவம்
  • கைத்துப்பாக்கியும் காக்கையும்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top