ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
இதழ் 2கவிதை

லக்‌ஷ்மி மணிவண்ணன் கவிதைகள்
லக்‌ஷ்மி மணிவண்ணன்

by olaichuvadi September 19, 2019
September 19, 2019

நீ ஏற்படுத்திக் கொள்கிற தூரத்தையே

நமக்கிடையிலான தூரமாக அமைத்து கொள்கிறேன்.

அது சில சமயம் ஒரு நீண்ட பாலத்தின் தூரமாகிறது.

வெளியூரில் நெருங்கிய தூரமாயிருப்பது சில நேரம்.

கப்பல் பயண தூரம் ?

அருகிலிருந்தும் மூன்றுநாள் சரக்கு ரயிலின் தூரமாயிற்று

சில நேரம் .

சரக்கு ரயிலின் தூரம்தான் பெருந்துயரம்

களைத்து உட்கார்ந்து கரிப்பிடித்து

அழுது வடிகிறது அது.

கடக்கவே இயலாத தேவதச்சனின் அணில்

பூமி துளைத்து சென்றடைந்த தூரம் ஒன்றும் உண்டு.

இப்போது தூரத்தை தூரம்… தூரம்… என்று கத்துகிறாய்

எல்லா தூரமும் நீ

தான் விரும்பி ஏற்படுத்திக் கொண்ட தூரம்தானே

செங்கொடியே ?

முதலில் அவரை அனுசரிக்க ஒரு தூரம் அமைத்தாய்

பின்பு இவரை அனுசரிக்க ஒரு தூரம் அமைத்தாய்

இடையில் உன் தாழ்வுணர்ச்சியொரு நெடுந்தூரம் அமைத்தது

நீ பார்த்துக் கொண்டிருப்பதெல்லாம் உன் தூரம்தானே அன்றி

என் தூரம் இல்லையே

நற்செள்ளையே ?

பயப்படாதே

உன் தூரம்தான்

உன் தூரம்தான்

அது

உன் தூரம்தான்

நீ சிறுகச் சிறுகக் கட்டியெழுப்பிய

உயரம்தான்

இப்போதுமுகம் மறைக்கும் அளவிற்கு வளர்ந்து

பெரிதாகியிருக்கிறது நீருற்றி கரைக்க இயலாத அளவிற்கு

அந்தச் சிறுவன்

நேற்று முன்தினம் இரவை தூக்கமின்மையில்

கடந்து கனரக லாரியில்

இங்கு வந்து கொட்டப்பட்டவன்

துரத்தப்பட்ட இரவு முகமெங்கும் அப்பியிருக்கிறது.

கொண்டை வாழையிலையை உங்கள் முன்னால் போட்டு

நீர் தெளிகிறான்

பாம்பு கொத்தியது போலே துடித்து

“தண்ணியை இப்படியா ஊற்றுவார்கள் ?”எனக் கேட்டு அவன்

அம்மையைத் திட்டுகிறீர்கள்

சாம்பாருக்கு நேரமாகிவிட்டதென

அவன் அப்பனைக் கேள்விகேட்கிறீர்கள்

சாப்பிட்டு முடிவதற்குள் சகோதர சகோதரிகள்

அத்தனை பேரையும் சாகடித்து விட்டுத்தான் எழும்புகிறீர்கள்

நீங்கள் உண்ட சோறு

அவனுக்கு வழங்கிய முதல் ஆயுதப் பயிற்சிக்கு

நன்றி கூற

உங்களை இப்போது பின்தொடரத் தொடங்குகிறது

துரத்தப்பட்ட அவனது இரவு.

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
கவிதைகள்லக்‌ஷ்மி மணிவண்ணன்
0 comment
0
FacebookTwitterPinterestEmail
olaichuvadi

முந்தைய படைப்பு
பெருந்தேவி கவிதைகள்
அடுத்த படைப்பு
உயிரினங்கள் மீதான சாதிய மேலாதிக்கத்தின் நுண் அரசியல்

பிற படைப்புகள்

தேவ மலர் யூமா வாசுகி

August 6, 2020

பி.ராமன் கவிதைகள் மலையாளத்திலிருந்து தமிழில்: ராஜன் ஆத்தியப்பன்

August 4, 2020

சுகுமாரன் கவிதைகள்

August 3, 2020

க.மோகனரங்கன் கவிதைகள்

August 3, 2020

மெய் பருவம் இசை ஸ்ரீஷங்கர்

August 3, 2020

சாதாரணமானவர் கண்டராதித்தன்

August 3, 2020

கதிர்பாரதி கவிதைகள்

August 3, 2020

சந்திரா தங்கராஜ் கவிதைகள்

August 3, 2020

மங்களேஷ் டபரால் கவிதைகள் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு: எம்.கோபாலகிருஷ்ணன்

August 3, 2020

கார்த்திக் நேத்தா கவிதைகள்

August 3, 2020

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

தேட

தற்போதைய பதிப்பு

  • தாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்!
  • தேவதை வந்துபோன சாலை
  • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும்
  • தலைநகரம்
  • வில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு விவாதம்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top