ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
இதழ் 2கவிதை

கார்த்திக் நேத்தா கவிதைகள்
கார்த்திக் நேத்தா

by olaichuvadi September 19, 2019
September 19, 2019

உமையே அம்மா

தனது

முலைக் காம்புகளை

கடு வனம் ஒன்றில் தொலைத்து விட்டு

அலைந்து கொண்டிருக்கிறாள் உமை.

உமை போன பின்ஆண்மை இழந்ததை முழுதுமாய் உணர்ந்து

கேவிக் கொண்டிருக்கிறான் அர்த்தநாரி.

சாகாவரம் பெற்ற காம்புகளிலிருந்து

கசிகிறது மொத்த வனத்துக்குமான

கருணைப் பெரும் நீரோடை.

மின்மினிகள் நீரோடையிலிருந்து

தாய்ப்பால் பருகி பறக்கின்றன ஒளிக்கு.

உறைந்த நீரோடையை இலைகொண்டு மெல்லச் சீவி

எல்லா உயிர்களுக்கும் பால் ரொட்டி

எடுத்துச் செல்கிறாள் வனப்பேச்சி.

உயிர் முட்ட உண்டு விட்ட

உயிர்களின் அன்பிலிருந்து இரு துளி

உமையின் முலைக் காம்புகளாயின.

குதலைச் சிறு சிவனுக்கு

அமைதியாக பால் தரத் தொடங்குகிறாள் உமை.

பால் கவிச்சியோடு படைக்கப்பட்டுவிட்டது

பரம், அப்போது எப்போதைக்கும்.

சுடரில் அமர்ந்து

சுடரில் அமர்ந்து

இருளை  கவனிக்கிறது

சகோரப் பறவை

அதன் ரொட்டித் துண்டு

நிலவின் ஒளி

தரையில் கிடக்கும்

ரொட்டித் துண்டை

அது விரும்புவது இல்லை

வெளியில் பொங்கும் ஒளி தான்

பசியைத் தூண்டுவதாக

அது உணர்ந்து சொல்கிறது

நிலத்தில் கிடக்கும் ஒளி

அழுகிப் போன ஒன்று என்று

அது உணர்ந்து வாழ்கிறது.

அது சொல்கிறது

நிலவை அடைதல் என்பது

அதன் ஒளியை அடைதல்

அவ்வளவே

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
கவிதைகள்கார்த்திக் நேத்தா
2 comments
3
FacebookTwitterPinterestEmail
olaichuvadi

முந்தைய படைப்பு
அகரமுதல்வன் கவிதைகள்
அடுத்த படைப்பு
புலிக்கலைஞன் உறங்கிக் கொண்டிருக்கிறார்

பிற படைப்புகள்

தேவ மலர் யூமா வாசுகி

August 6, 2020

பி.ராமன் கவிதைகள் மலையாளத்திலிருந்து தமிழில்: ராஜன் ஆத்தியப்பன்

August 4, 2020

சுகுமாரன் கவிதைகள்

August 3, 2020

க.மோகனரங்கன் கவிதைகள்

August 3, 2020

மெய் பருவம் இசை ஸ்ரீஷங்கர்

August 3, 2020

சாதாரணமானவர் கண்டராதித்தன்

August 3, 2020

கதிர்பாரதி கவிதைகள்

August 3, 2020

சந்திரா தங்கராஜ் கவிதைகள்

August 3, 2020

மங்களேஷ் டபரால் கவிதைகள் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு: எம்.கோபாலகிருஷ்ணன்

August 3, 2020

கார்த்திக் நேத்தா கவிதைகள்

August 3, 2020

2 comments

இரா மதிபாலா October 7, 2019 - 11:38 am

மிகச் சிறந்த படைப்புகளை கொண்ட இதழ்

Reply
இராக்கண்ணன் October 10, 2019 - 12:12 pm

இரண்டாவது கவிதையில் வருகிற “சகோரப் பறவை” எதனைக் குறிக்கிறது கவிஞரே?

Reply

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

தேட

தற்போதைய பதிப்பு

  • தாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்!
  • தேவதை வந்துபோன சாலை
  • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும்
  • தலைநகரம்
  • வில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு விவாதம்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top