ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
இதழ் 8கவிதை

க.மோகனரங்கன் கவிதைகள்

by olaichuvadi August 3, 2020
August 3, 2020

 

மறு மலர்

உறக்கத்திலிருக்கும்
குழந்தை முன்
மிருதுவான ரோஜாவை
நீட்டுகிறார்
கடவுள்
கண் திறவாமலே
சிரிக்கிறது குழந்தை
மறு நிமிடம்
மலர் இருந்த கையை
மறைத்துக் கொள்கிறார் அவர்
கண் திறவாமலே
சிணுங்குகிறது குழந்தை
குமரி வடிவாயிருந்த
குழந்தையொருத்தி
சொன்ன கதையை
அகல விரிந்த விழிகளோடு
அதிசயம் என்பதாய் கேட்டிருந்தவனுக்கு
அப்போது தெரியாது
கடவுள் தன் முன்
காட்டி மறைக்கும்
இளஞ் சிவப்பு வண்ணப்
புதிர்
அதுவென.
இப்போதும்
முடிவிலே இன்பம் தொனிக்கும்
கதைகளைப் படிக்கும்போது
நினைவின் மடிப்பினின்றும்
வாடிய மலர் ஒன்றின்
வாசனையை நுகர்கிறான்
அவன்.

லோகோ பின்ன ருசி

யாரும் பார்க்காதபோது
இரகசியமாக வாயிலிட்டு
ஒரு கடி கடித்துவிட்டு
உமிழ் நீரோடதன் சுவை
உள்ளிறங்கும் முன்பே
தீர்ந்துவிடப் போகிறதென்ற பதட்டத்தில்
திரும்பவும்
பையிலிட்டு பதுக்கி வைத்த
சிறு வயது
இனிப்பு மிட்டாயின்
அதே தித்திப்பு
உரிமை கொண்டு நான்
ஒருபோதும் பிறர் முன்
உச்சரித்துவிடக் கூடாத
உன் பெயருக்கு

தெளிவு

நெஞ்சில் ஒளிர்ந்த
நினவு முகம்
மங்கி விட்டதென்ற
பதட்டத்தோடு
நண்பரின்
மனசிகிச்சை மையத்திற்கு
போனேன்
பல கேள்விகளுக்கும்
சில பரிசோதனைகளுக்கும்
பிறகு
எனக்கு கோளாறு
மனதில் இல்லை
கண்ணில்தான் என்றார்.
ஆதலால்
கண்மருத்துவரிடம்
காட்டி புதிதாக
கண்ணாடி மாற்றிக் கொண்டேன்.
எல்லாமுமிப்போது
இன்னமும்
துலக்கமாகத் தெரிகிறது
ஆனால் ,
இந்தக் கண்ணாடியைத்தான்
எங்காவது கைமறதியாய் வைத்துவிட்டு
அடிக்கடி தேடவேண்டியிருக்கிறது.

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
க.மோகனரங்கன்கவிதைகள்
0 comment
1
FacebookTwitterPinterestEmail
olaichuvadi

முந்தைய படைப்பு
மெய் பருவம் இசை
அடுத்த படைப்பு
சுகுமாரன் கவிதைகள்

பிற படைப்புகள்

தாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்! ஆ.சிவசுப்பிரமணியன் நேர்காணல்

August 7, 2020

தேவதை வந்துபோன சாலை

August 7, 2020

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும் பு.மா.சரவணன்

August 7, 2020

தலைநகரம் எம்.கோபாலகிருஷ்ணன்

August 6, 2020

வில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு...

August 6, 2020

வெள்ளந்தி வா.மு.கோமு

August 6, 2020

தேவ மலர் யூமா வாசுகி

August 6, 2020

நித்யவெளியில் துயருறும் ஆன்மா கோகுல் பிரசாத்

August 6, 2020

மாமிச வாடை சித்துராஜ் பொன்ராஜ்

August 6, 2020

ENGLISH IS A FUNNY LANGUAGE இரா.சிவசித்து

August 5, 2020

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

தேட

தற்போதைய பதிப்பு

  • தாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்!
  • தேவதை வந்துபோன சாலை
  • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும்
  • தலைநகரம்
  • வில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு விவாதம்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top