ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
இதழ் 8கவிதை

கார்த்திக் நேத்தா கவிதைகள்

by olaichuvadi August 3, 2020
August 3, 2020

ஓவியம்: அ.சண்முகம்

 

அக் கனி

பகுபடாத ஒருமையின் கனி
கணத்தில் முழுமையாகக்
கனிந்திருக்கிறது
கணத்துக்குச்
சற்றே சற்று அருகில் தான்
நிற்கிறேன்
கைக்கொள்ள முடியவில்லை
அருகிலிருப்பதனாலேயே
அகப்பட்டு விடுமா என்ன
அக் கனி .

சுவாங்ட்சுவின் வண்ணத்துப் பூச்சு

இப்போது அவன்
கண்ணீரிலிருந்து மூலிகை
பெறலாம்
இப்போது அவன்
அங்கு மலர்ந்துகொண்டிருக்கும்
மலரை
இங்கிருந்துகொண்டு உணரலாம்
இப்போது அவன்
கண்களை மூடி
நடந்துகொண்டிருப்பனவற்றை
மட்டும் கவனிக்கலாம்
இப்போது அவன்
சூக்கும விழிப்பில் தூங்கலாம்
இப்போது அவன்
மூச்சின் சீர்மையைக் குழைக்காத
எண்ணங்களுடன் இயங்கலாம்
இப்போது அவன்
கஞ்சா பிடிப்பதிலிருந்து
முழு விடுதலை அடையலாம்
இப்போது அவன்
எந்த எண்ணம் உதிக்க வேண்டுமெனக் கட்டளையிடலாம்
இப்போது அவனது
மலரிதழ்களுக்குத் தண்ணீர்
ஊற்ற வேண்டியதில்லை
இப்போது அவன்
கூப்பிட
எந்தப் பெயரும் தேவையில்லை
இப்போது அவன்
அமர்ந்து இடத்திலேயே பயணம் போகலாம்
இப்போது அவன்
அறிவுஜீவிகளுக்குக் கருணை
காட்டலாம்
இப்போது அவன்
முரண்களின் இயற்கையைப் பற்றி
எடுத்தியம்பலாம்
இப்போது அவன்
இப்போதின் அவனாக இருக்கலாம்
இப்போது அவன்
இப்போதும் அவனும்
இல்லாமல் இருக்கலாம்.

Fruits of tears

எவ்வளவு வலி
இந்த அறியாமை
எவ்வளவு பாரம்
இந்த அகந்தை
எவ்வளவு சல்லித்தனம்
இந்தப் பற்று
எவ்வளவு அசிங்கம்
எண்ணங்களுக்கேற்ப
நடனமிடுதல்
எவ்வளவு நகைப்புக்குரியது
அறிவின் தூமைக்கு அலைவது
எவ்வளவு பிற்போக்கு
உணர்தலின் வெகுதொலைவில்
குழம்பிக் கொண்டு
“இல்லை” என்று ஆணித்தரம் பேசுவது
எவ்வளவு முட்டாள்தனம்
மேல்நோக்கி மட்டுமே
ஆகாயத்தைப் பார்ப்பது
எவ்வளவு பொறுமையில்லாப் போக்கு
ஆத்மனின் நாதம் பெற
வாத்தியங்களை உருட்டிக் கொண்டிருப்பது
எவ்வளவு உண்மையானது
நான் என்பது
எவ்வளவு பொய்யானது
நானை அழிக்கமுடியும் என்பது
எவ்வளவு நேர்முகமானது
பசிக்கும் எண்ணமாவது
எவ்வளவு குழப்பமானது
வயிற்றுப் பசிக்கு உணவிடுவது
எவ்வளவு இயற்கையானது
இன்பத்திற்கு நான் அடிமை என்பது
எவ்வளவு செயற்கையானது
அதை ” நான்” எழுதிக் கொண்டிருப்பது.

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
கவிதைகள்கார்த்திக் நேத்தா
0 comment
0
FacebookTwitterPinterestEmail
olaichuvadi

முந்தைய படைப்பு
செல்வசங்கரன் கவிதைகள்
அடுத்த படைப்பு
மங்களேஷ் டபரால் கவிதைகள்

பிற படைப்புகள்

தாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்! ஆ.சிவசுப்பிரமணியன் நேர்காணல்

August 7, 2020

தேவதை வந்துபோன சாலை

August 7, 2020

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும் பு.மா.சரவணன்

August 7, 2020

தலைநகரம் எம்.கோபாலகிருஷ்ணன்

August 6, 2020

வில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு...

August 6, 2020

வெள்ளந்தி வா.மு.கோமு

August 6, 2020

தேவ மலர் யூமா வாசுகி

August 6, 2020

நித்யவெளியில் துயருறும் ஆன்மா கோகுல் பிரசாத்

August 6, 2020

மாமிச வாடை சித்துராஜ் பொன்ராஜ்

August 6, 2020

ENGLISH IS A FUNNY LANGUAGE இரா.சிவசித்து

August 5, 2020

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

தேட

தற்போதைய பதிப்பு

  • தாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்!
  • தேவதை வந்துபோன சாலை
  • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும்
  • தலைநகரம்
  • வில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு விவாதம்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top